டெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கினாலும் கிரிக்கெட்டில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பந்துகளை ஷைன் செய்வதற்கான வழிமுறைகளில் எச்சில் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிரிக்கெட்டில் சமூக விலகலை கடைப்பிடிப்பது எளிது என்றும் ஆனால் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் அதை செயல்படுத்துவது கடினம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்
சர்வதேச அளவில் கொரோனாவிற்கு பிறகும் அதன் பாதிப்பு இருக்கும் என்றும் அதனுடன் கிரிக்கெட் வீரர்கள் வாழ வேண்டும் என்றும் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ஆனால் கிரிக்கெட்டில் சமூக விலகலை கடைப்பிடிப்பது எளிது என்றும் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் அதை கடைபிடிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டீமை விட்டு தூக்கிட்டு எங்கிட்ட பேசவே இல்லை.. ரெய்னா அதிரடி.. அப்ப எம்எஸ்கே பிரசாத் சொன்னது பொய்யா?
கிரிக்கெட்டில் பந்துகளை ஷைன் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த எச்சில் உள்ளிட்டவற்றில் சில கட்டுப்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு இந்த காரணங்களால் கிரிக்கெட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அது அப்படியே தான் இருக்கும் என்றும் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அதற்கு மாற்று கண்டிப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.