தோனியின் முதலீடுகள்
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனி என்னதான் செய்கிறார் என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. அதற்கான விடை தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையிலும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி தோனி பெரும் தொழிலதிபராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஆனால் விவசாயம் மட்டுமே வெளியே தெரிகிறது.
விவசாயம்
ஓய்வுக்கு பிறகு தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் விவசாயம் செய்து வருகிறார். இதில் காய்கறிகள், பல வகைப்பட்ட பழங்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக துபாய்-க்கு தோனி விற்பனை செய்து வருகிறார். இதன் லாபம் ஏகபோகத்திற்கு உள்ளது.
ஆடை துறை
seven ( செவென் ) எனும் நிறுவனம் விளையாட்டு துறைக்கான ஜெர்ஸிகள், ஆடைகள், காலணிகள், ஷூ உள்ளிட்ட பலவற்றை விற்பனை செய்து வருகிறது. இதன் முக்கிய பங்குதாரர் எம்.எஸ்.தோனி தான் ஆகும். இதன் விளம்பர தூதரும் அவரே ஆகும்.
விளையாட்டு துறை
இந்தியாவில் ஐபிஎல்-ஐ போன்றே, கால்பந்து ஆட்டத்திற்காக நடத்தப்படும் தொடர் தான் ஐஎஸ்எல். மிகவும் பிரபலமான இந்த தொடரில் சென்னையின் எஃப்சி அணியின் முக்கிய பங்குதாரர் தோனி ஆகும்.
ஜிம் மற்றும் ஃபிட்னஸ்
தோனி உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்டவர். எனவே அதிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ஃபிட் வேர்ல்ட் ( Sportsfit world Pvt.ltd ) என்ற பெயரில் இந்தியா முழுக்க உள்ள 200க்கும் மேற்பட்ட ஜிம்களை நடத்தி வருகிறார்.
ஹோட்டல் துறை
தோனி ஒரு தங்கும் விடுதி ஒன்றையும் வைத்துள்ளார் என்பது ஆச்சரியத்தை தரலாம். ஆம், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தோனிக்கு சொந்தமாக மஹி ரெஸிடன்சி (mahi residency) என்ற தங்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இருப்பதிலேயே குறைவாக முதலீடு செய்தது இதில் தான் எனக்கூறப்படுகிறது.
உணவுத்துறை
7INK Brews எனப்படும் உணவு மற்றும் திண்பண்டங்கள் உற்பத்தி நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்கு தாரராக தோனி இருக்கிறார். இந்த நிறுவனம், காப்டர் 7 என்ற பெயரில் சாக்லேட் மற்றும் ஜூஸ்களை விளம்பரப்படுத்தியது. தோனியின் ஹெலிகாப்டன் ஷாட் மற்றும் 7 என்ற ஜெர்ஸி நம்பரை வைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் துறை
கடந்த 2021ம் ஆண்டு khata book என்ற டிஜிட்டல் என்ற தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்தார். தற்போது வரை அந்த நிறுவனத்தின் மதிப்பு 29 மில்லியன் டாலர்களாக உயர்ந்து நிற்கிறது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதரும் தோனி தான் ஆகும்.
ட்ரோன்கள்
சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் தோனி முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது. தோனி ஏற்கனவே விவாசயம் செய்துவரும் சூழலில், இதில் தடம்பதித்துள்ளார்.