அட்டவணை வெளியீடு
வரும் ஏப்ரல் 5ம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டு இருக்கிறது. எஞ்சிய போட்டி அட்டவணை சில தினங்களில் வெளியாகும்.
23ல் முதல் போட்டி
இப்போது உள்ள அறிவிப்பின்படி... சென்னையில் 2 போட்டிகள் நடக்கின்றன. அதில் வரும் 23ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
டிக்கெட் விற்பனை
அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 16ல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 31ம் தேதி, சென்னை, ராஜஸ்தானை சந்திக்கிறது.
ரசிகர்கள் தயார்
சென்னை அணி தான் இம்முறையும் கோப்பையை தட்டிச் செல்லும் என்று ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களின் கொண்டாட்டங்களுக்கு மெருகேற்றுவது போல சென்னை அணி வீரர் ஜெகதீசன் தோனியை புகழ்ந்து தள்ளி உள்ளார்.
முழு உடல்தகுதி
அவர் கூறியிருப்பதாவது:தோனி இந்த வயதிலும் இப்படி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. அவர் விளையாடுவதை பார்த்தால் 37 வயது என்று கூற முடியாது.
பேசுவது குறைவு
மைதானத்தில் அவர் பேசுவதே மிகவும் குறைவு. ஆனால் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தமான அர்த்தம் இருக்கும். அதுதான் போட்டியின் முடிவையே மாற்றும்.
கற்றுக் கொண்டேன்
அவரிடம் இருந்து விளையாட்டை பற்றிய தொழில் நுணுக்கத்தை மட்டும் நான் கற்றுக் கொள்ளவில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.