மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.
இதுவரை தான் பங்கேற்ற 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே, 7 வது முறையாக பைனல்ஸ் நுழைந்தது.
இதுவரை 2010 மற்றும் 2011 ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை மூன்று முறை சாம்பியனாகியுள்ளது.