For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வெளியே அனுப்ப போகும் 4 வீரர்கள்.. அடுத்த சீசனில் விளையாட மாட்டார்கள்.. மினி ஏலத்தில் திட்டம்

சென்னை: அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சிஎஸ்கே தற்போதே அதற்கான காய்களை நகர்த்தி வருகிறது.

இந்த சீசனில் சொதப்பிய 5 வீரர்களை தூக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை மினி ஏலத்தில் சிஎஸ்கே வாங்க உள்ளது.

கீழ்க்காணும் 5 வீரர்களை நீக்குவதன் மூலம் சிஎஸ்கே மினி ஏலத்தில் அதிக பணத்தை செலவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2022 - சிஎஸ்கே வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸ்.. தோற்றாலும் மீசைய முறுக்கு தருணம்ஐபிஎல் 2022 - சிஎஸ்கே வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸ்.. தோற்றாலும் மீசைய முறுக்கு தருணம்

கிறிஸ் ஜார்டன்

கிறிஸ் ஜார்டன்

ஐபிஎல் மெகா ஏலத்தில் கிறிஸ் ஜார்டனை 3 கோடியே 60 லட்சம் ருபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக 4 போட்டியில் மட்டுமே கிறிஸ் ஜார்டன் விளையாடினார். இதில் 2 போட்டிகள் தோல்வி அடைய ஜார்டன் முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், அடுத்த சீசனில் ஜார்டன் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துசார் தேஷ்பாண்டே

துசார் தேஷ்பாண்டே

ஐபிஎல் மெகா ஏலத்தில் துஷார் தேஷ்பாண்டேவை 20 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவர் வெறும் 2 போட்டியில் மட்டுமே விளையாடி 1 விக்கெட்டை மட்டுமே கொடுத்தார். ஒரு ஓவருக்கு 9 ரன்கள் வழங்கிய தேஷ்பாண்டேக்கு தோனி பிறகு வாய்ப்பு தரவில்லை. இதனால் தேஷ்பாண்டே வெளியே அனுப்பப்படலாம்.

ஆடம் மிலின்

ஆடம் மிலின்

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. ஆனால் காயம் காரணமாக மிலின் பெரும்பாலான ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அடுத்த ஆண்டு தீபக் சாஹர் வந்துவிடுவார். இதனால் மிலினுக்கு வேலை இருக்காது. அதே சமயம், மிலினுக்கு மாற்றாக எடுக்கப்பட்ட இலங்கை வீரர் மதிஷா பதிரானா சிறப்பாக செயல்பட்டதால் மிலன் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

நடப்பு சீசன் போதே ஐபிஎல் தொடரிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக அம்பத்தி ராயுடு கூறி இருந்தார். ஆனால், சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தலையிட்டின் பேரில் ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார். இதனால் ராயுடுவுக்கு சிஎஸ்கேவில் சிக்கல் இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ராயுடு விளையாடுவது சந்தேகமே.

Story first published: Thursday, June 2, 2022, 22:52 [IST]
Other articles published on Jun 2, 2022
English summary
CSK Might remove 4 Players from the team for Next IPL season சிஎஸ்கே வெளியே அனுப்ப போகும் 4 வீரர்கள்.. அடுத்த சீசனில் விளையாட மாட்டார்கள்.. மினி ஏலத்தில் திட்டம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X