சென்னை: ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றைய ஏலத்தில் கிடைக்கப் போவது யார் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன. அதையடுத்து எட்டு அணிகளுக்கும் புதிதாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
அக்சார் படேலை மட்டும் தக்க வைத்துள்ள அணியிடம், ரூ.67.5 கோடி பட்ஜெட் உள்ளது. மேலும் மூன்று பேரை மட்டுமே தேர்வு செய்யலாம் என்ற நிலையில், ஹசிம் ஆம்லா, டேவிட் மில்லர், சந்தீப் சர்மா ஆகியோர் தக்க வைக்கப்படலாம். கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்தை தக்க வைத்துள்ளது. மேலும் மூன்று பேரை மட்டுமே ஏலத்தில் தக்க வைக்க முடியும். ரூ. 67.5 கோடி பாக்கி உள்ளது. அஜிங்யா ரஹானே, தாவல் குல்கர்னி, ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் ஏலத்தில் தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ரஞ்சியில் கலக்கிய விதர்பா பந்துவீச்சாளர் ரஜ்னீஸ் குர்பானிக்கும் வாய்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் தக்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.49 கோடி பட்ஜெட் உள்ளது. கிறிஸ் கெயில், யுஸ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது,
டெல்லி டேர்டெவில்ஸ்
ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். குயின்டன் டிகாக், சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்க வைக்கப்படலாம்.