சரியான போட்டி
இந்த சீசனில் மிகவும் வலுவான பேட்டிங்கை கொண்டதாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் மிகவும் வலுவான பவுலிங் வரிசையை ஹைதராபாத் கொண்டுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை மோதிய இரண்டு ஆட்டங்களிலுமே சிஎஸ்கேதான் வென்றுள்ளது.
நேரடி பைனல்ஸ் வாய்ப்பு
மும்பையில் நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வென்றால், நேரடியாக பைனல்ஸ் நுழையலாம். இதில் தோற்கும் அணிக்கு, கொலகத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச் சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெறும் அணிதான் பைனல்ஸ் முன்னேறும்
ஹைதராபாத்தை சுருட்டியது
இந்த நிலையில் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி துவக்கத்தில் இருந்தே ரன் குவிக்க திணறியது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொதப்ப ஒரு கட்டத்தில் பரிதாப நிலையில் இருந்தது. கடைசியில் யூசுப் பதான் 24, கார்லோஸ் பிராத்வொயிட் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்து சரிவில் இருந்து மீட்டனர்.
பைனல்சில் சிஎஸ்கே
மிகவும் சுலபமான இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தது. ஷேன் வாட்சன் 0, ரெய்னா 22, ராயுடு 0, தோனி 9, பிராவோ 7, ஜடேஜா 3, சாஹர் 10, ஹர்பஜன் 2 என்று ஆட்டமிழக்க தோல்வியில் விளிம்பில் சிஎஸ்கே இருந்தது. ஒரு பக்கம் பொறுமையாக விளையாடிய டுபிளாசி கடைசி வரை நிலைத்து நின்றார். கடைசி ஓவர்களில் அவர் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். கடைசியில் வந்த ஷர்துல் தாக்குர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து சிஎஸ்கே வென்றது. இதன் மூலம் சிஎஸ்கே பைனல்ஸ் முன்னேறியது.