புதிய கேப்டன்
தோனிக்கும் அடுத்த சீசனில் 41 வயதாகி விடும் என்பதால், அவர் அணியில் இருப்பதே சிரமம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில பேர் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் அது தெளிவாகி இருப்பதாக கூறுகின்றனர்.
சிஎஸ்கே வீடியோ
சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு காரணமாக அந்த அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடவோம் என்றும், ரசிகர்கள் தங்களுக்கு எப்போதும் போல் ஆதரவு வாங்க வேண்டும் என்று ருத்துராஜ் கெய்க்வாட் அந்த வீடியோவில் தோன்றி ரசிகர்களிடம் உரையாடினார்.
அடித்து கூறும் ரசிகர்கள்
இதே போன்று 2020ஆம் ஆண்டு சென்னை தோற்ற போது, தோனி இதே ஸ்டைலில் பேசிய வீடியோ உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனை வைத்து பார்த்தால் அடுத்த ஆண்டு ருத்துராஜ் தான் சிஎஸ்கேக்கு தலைமை தாங்குவார் என்றும் அதனால் தான் அவரை வைத்தே வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளதாகவும் ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.
இன்று தெரிந்துவிடும்
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் முடிவில் தோனி எப்படியும் கிரிக்கெட் வர்ணணையாளர்களிடம் பேசும் போது, அவரது எதிர்காலத்தை பற்றியும்,சிஎஸ்கேவின் எதிர்காலத்தை பற்றியும் கூறுவார். அதில் உண்மை என என்று தெரிந்துவிடும். ஒருவேலை தோனியும் அடுத்த ஆண்டு கேப்டனாக தொடர்ந்தால், அவருக்கு துணை கேப்டனாக ருத்துராஜ் செயல்படுவார் என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.