நிதானம் + அதிரடி
இந்தப் போட்டியில் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது தோனி நிதானமாக ஆடி, கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி காட்டி அணியை 175 ரன்களுக்கு இட்டுச் சென்றார்.
கற்றுக் கொள்ள வேண்டும்
இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், "தோனி எப்படி போட்டியை அதன் கடைசி வரை எடுத்துச் சென்று வேலையை முடிக்கிறார் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் தான் இதை செய்வார்கள். அதை இன்று தோனி கண்முன் காட்டினார்" என்றார்.
மூன்று சிக்ஸர்
தோனி கடைசி மூன்று ஓவர்களுக்கு முன்பு வரை ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ரன் எடுத்து வந்தார். பின்னர் அதிரடி காட்டியவர், கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார்.
ஸ்டோக்ஸ் போராட்டம்
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ், தன் அணியின் வெற்றிக்காக சேஸிங்கில் கடைசி ஓவர் வரை போராடினார். எனினும், கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அந்த அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்து தோல்வியை சந்தித்தது.