தடுமாற்றம்
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தொடக்க வீரர் சுப்மன் கில் வந்த வேகத்தில் வெளியேற, கேப்டன் கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ரோகித் சர்மா மட்டும் 47 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 80 / 4 என தடுமாறியது.
பண்ட்
இதனையடுத்து 4 விக்கெட்டிற்கு களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். ஆனால் அவர் 100வது ரன்னை சிக்ஸர் அடித்து எடுத்தவித அனைவரையும் வியக்கவைத்தது. மேலும் ஆட்டத்தின் 83வது ஓவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். ஆனால் அதனை ரிவேர்ஸ் ஷாட் அடித்து பண்ட் அசத்தினார். இது அனைவரையும் வியக்கவைத்தது.
டேவிட் லாய்ட்
இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட், ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் காரணமாக 2 செஷண்களிலும் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் ரிஷப் பண்ட் ஆட்டத்தை முழுவதுமாக மாற்றிவிட்டார். ஆண்டர்சனுக்கு எதிராக அவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் அபாரமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இங்கிலாந்திடம் இது போன்ற இன்னிங்ஸ் ஆட கூடிய வீரர் உள்ளாரா என்றால் ஜாஸ் பட்லர் உள்ளார். ஆனால் அவர் தற்போது சொந்த நாட்டில் உள்ளார். பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரரை வைத்திருந்தால் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெல்லலாம் என டேவின் லாய்ட் என தெரிவித்துள்ளார்.