4 வது ஆஷஸ் போட்டி
ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சூதாட்டம் தொடங்கி வீரர்களின் சண்டை வரை இந்த வருடமும் ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலேயே வைரல் ஆகி உள்ளது. ஒவ்வொரு நாள் போட்டியிலும் ஒவ்வொரு விதமான களேபரங்கள் நடந்து வருகிறது.
அவுட் ஆனார்
இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 99 ரன்கள் எடுத்தார். ஆனால் இங்கிலாந்து பவுலர் டாம் குரான் வீசிய பந்தில் அப்போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் அவர் தனது 24 வது சதத்தை அடிக்க முடியாமல் போனது.
மீண்டும் வந்தார்
இவர் அவுட் ஆன காரணத்தால் பெவிலியன் நோக்கி சென்றார். பாதி தூரம் சென்ற போது அம்பயரால் மீண்டும் அழைக்கப்பட்டார். டாம் வீசிய பந்து நோ-பால் என்றும் அம்பயர் அறிவித்தார். காலை டாம் கிரீஸுக்கு வெளியே வைத்து இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.
சதம்
பின் மீண்டும் களத்திற்கு வந்த வார்னர் அதிரடியாக ஆடினார். சிங்கிள் அடித்த அவர் தனது 21 வது சதத்தை வெற்றிகரமாக எட்டி பிடித்தார். ஆனால் அவர் மீண்டும் 103 ரன் இருக்கும் போது அவுட் ஆனார். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.