3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இரு அணிகளும் சிட்னியில் இன்று தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளன. இரு அணிகளுக்கு இடையில் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
3வது போட்டியில் பங்கேற்பு
கடந்த இரு போட்டிகளில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் தற்போது 3வது போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவருக்கு காயம் முழுமையாக குணமாகவில்லை என்றாலும் அவர் சமாளித்து விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
லாங்கர் நம்பிக்கை
இதே நம்பிக்கையை தற்போது அணியின் தலைமை கோச் ஜஸ்டின் லாங்கரும் தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் வார்னர் விளையாடாததை சுட்டிக் காட்டியுள்ள லாங்கர், ஆயினும் அவர் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறியுள்ளார்.
புகோவ்ஸ்கி பங்கேற்பு
வார்னர் போராட்ட குணம் கொண்டவர் என்றும் அதை கொண்டு அவர் 3வது போட்டியில் பங்கேற்று விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் லாங்கர் தெரிவித்துள்ளார். இவரும் காயம் காரணமாக கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.