அதிரடி ராகுல்
அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ராகுல் அதிரடியாக ஆடி சென்னை பந்து வீச்சாளர்களை அதிர வைத்தார். 108 ரன்களில் தான் சென்னை அணியால் எதிரணியின் முதல் விக்கெட்டை பறிக்க முடிந்தது.
நகைச்சுவை சம்பவம்
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. 9வது ஓவரின் போது சென்னை அணி வீரர் தீபக் சாஹர், கெய்லுடன் குறும்பாக காலைப் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 9வது ஓவரின் முதல் பந்தை வீசிகிறார் தீபக். அதனை எதிர்கொள்ளும் ராகுல் வேகமாக விளாசுகிறார்.
காலுக்குள் புகுந்த பந்து
அந்த பந்தை நேராக நான் ஸ்டிரைக் பகுதியில் உள்ள ஸ்டெம்புகளை பதம் பார்க்கிறது. அதில் இருந்து பெயில்ஸ் கீழே விழுகிறது. அப்போது அங்கிருந்த கெயில் கால் அருகே மெதுவாக அந்த பந்து செல்கிறது. மட்டையை கிரிசின் உள்ளே வைத்து கொண்ட கெய்லின் காலுக்குள் பந்து நகர்கிறது.
|
வைரல் வீடியோ
அந்த பந்தை எடுக்கும் போது தீபக், கெயிலின் காலை பிடித்து எடுக்கிறார். இந்த சுவாரசிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது. விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள கெயில் முயல்வதும், எப்படியாவது அந்த பந்தை எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தீபக் சாஹர் இருப்பதும் அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.