இந்தியா பேட்
ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததார். இந்திய அணி சார்பில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றங்கள்
தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். சமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக யஜூவேந்திர சாஹலும், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடக்க வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோனிஸ், லயானுக்கு பதிலாக, பெஹரன்டார்ப், டர்னர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர்களாக தவானும், ரோகித்தும் களம் இறங்கினர்.
அபார ஜோடி
பல ஆட்டங்களில் சொதப்பல்.. என்ன செய்வது என்று கடும் விமர்சனங்களுக்கு ஆளான இந்த ஜோடி.. தமது பேட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தொடக்கம் முதலே இருவரும் ஆஸி. அணியின் பந்தை லாவகமாக எதிர்கொண்டனர்.
முற்றுப்புள்ளி
தவறான பந்துகளை தேர்ந்தெடுத்து அருமையாக ஆடினர். பல போட்டிகளில் ரன்கள் எடுக்க தடுமாறிய தவான்... இந்த போட்டியில் விமர்சனம் கூறியவர்களின் வாயை அடைத்துவிட்டார்.
28வது அரைசதம்
தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்த அவர் மொகாலி போட்டியில் தமது 28வது அரை சதத்தை கடந்து பார்முக்கு திரும்பி உள்ளார். நீண்ட நாட்களாக இழந்த பார்மை அவர் மீட்டுள்ளதால்.. உலக கோப்பை தொடருக்கான துவக்க ஜோடி மீண்டும் களமிறங்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.