For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒவ்வொரு போட்டியில் மாஸ்டர் பிளான்.. தோனியின் புது அஸ்திரம்.. சிஎஸ்கே கம்பேக்கிற்கு இதுதான் காரணம்

அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அனி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.

இந்த வெற்றி நடைக்கு என்ன காரணம் என பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அது பற்றி புதிய கருத்து ஒன்று கூறப்படுகிறது.

திட்டம்

திட்டம்

தோனி பஞ்சாப் போட்டியுடன் சேர்த்து கடந்த மூன்று போட்டிகளில் மூன்று வெவ்வேறு பந்துவீச்சு கூட்டணியை ஆட வைத்துள்ளார். இந்த திட்டம் தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் சில விமர்சகர்கள்.

தேர்வு

தேர்வு

ஆடுகளங்களுக்கு ஏற்ப அவர் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து வருகிறார். கடந்த போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்து இருந்தார் தோனி. கரன் சர்மா, மிட்செல் சான்ட்னர் அணியில் இடம் பெற்று இருந்தனர்.

இருவர் நீக்கம்

இருவர் நீக்கம்

ஆனால், பஞ்சாப் போட்டியில் அதிரடியாக அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

மாற்றம்

மாற்றம்

மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்தை நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்து வீச்சாளர்கள் என மாற்றினார் தோனி. இந்த மாற்றம் தான் எதிரணிகளை குழப்பி வருகிறது.

குழப்பம்

குழப்பம்

சிஎஸ்கே அணியில் யார் பந்து வீசுவார்கள் என்பது தெரியாத நிலையில் எதிரணிகள் பேட்டிங்கில் தடுமாறி தோல்வி அடைந்து வருகின்றன. தொடர்ந்து போட்டிகளில் பந்து வீச்சாளர்களை மாற்றி தோனி வெற்றிகளை பெற்று வருகிறார்.

Story first published: Sunday, November 1, 2020, 18:28 [IST]
Other articles published on Nov 1, 2020
English summary
Dhoni changing bowling to win matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X