புதிய தகவல்
இந்நிலையில் தோனி தேர்ந்தெடுக்கும் இந்த விக்டர் பிரிவு குறித்து குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தோனி இம்மாதம் 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை 106 தீவிரவாதிகள் தடுப்பு ராணுவ பட்டாலியன் படையினருடன் இணைந்து விக்டர் படையுடன் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.
உருவான வரலாறு
ஜம்மு, காஷ்மீரில் கிளர்ச்சி ஏற்பட்ட பின் உருவான அமைப்பு தான் ராஷ்டிரிய ரைபிள்ஸ் அல்லது ஆர்ஆர் எனப்படும் பிரிவாகும். இந்த பிரிவு விஸ்வநாத் பிரதாப் சிங் என்பவர் மூலம் அரசாங்கத்தின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டது.
காஷ்மீரில் படைகள்
ராணுவத்தின் பிற பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்ட ராணுவ வீரர்களால் உருவானது. இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெரும் ஆபத்து வாய்ந்த காஷ்மீர் பகுதிகளில் இந்த படைகள் செயல்பட்டு வருகின்றன.
தோடாவில் டெல்டா
மொத்தம் 5 வகைகளாக உள்ளன. ரோமியோ படையானது, ராஜோரி மற்றும் பூஞ்சில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. டெல்டா படை, தோடாவில் செயல்பட்டு வருகிறது.
உதம்பூரில் சீருடை
விக்டர் படை, அனந்த்நாக், புல்வாமா,சோபியான், குல்கம் மற்றும் புட்காம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. கிலோ படையானது, குப்வாரா, பாராமுல்லா மற்றும் ஸ்ரீநகரில் செயல்பட்டு வருகிறது. சீருடை படை, உதம்பூர் மற்றும் பானி ஹாலில் செயல்பட்டு வருகிறது.
தோனி பயிற்சி
இந்த படைகளில் தோனி தேர்ந்தெடுத்திருக்கும் படை விக்டர் படையாகும். அண்மையில், மிக பெரிய தாக்குதலுக்கு உள்ளான புல்வாமா பகுதியிலும் செயல்பட்டு வருவதால் தோனி அதிபயங்கரமான இடத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.