ஏற்கனவே முடிவு
அவர் தமது ஓய்வு பற்றி முன்பே முடிவெடுத்துவிட்டார். ஆனால் கோலியின் வேண்டுகோளுக்கு இணங்க தமது முடிவை 2 மாதங்கள் தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு, ராணுவத்துக்கு சென்றிருக்கிறார் என்று கிரிக்கெட் வட்டார தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.
புதிய தகவல்
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முனாப் பட்டேல், தோனியின் ஓய்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: தோனி தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருப்பார். அது குறித்து ஏற்கனவே அவர் பிசிசிஐயிடம் தெரிவித்து இருப்பார்.
நன்றாகவே தெரியும்
அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். யாரும் ஆலோசனை வழங்க தேவை இல்லை. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்து பிசிசிஐயிடம் நிச்சயமாக தனது முடிவை தெரிவித்திருப்பார்.
தோனி சாதனைகள்
எனவே தோனியின் ஓய்வு குறித்து அவரை யாரும் எதுவும் தொந்தரவு செய்ய வேண்டாம். 1975ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை தோனி 2007 முதல் 2015ம் ஆண்டுகளிலேயே செய்து முடித்து விட்டார்.
அனைத்து விதமான கோப்பை
அவர் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்று தந்து விட்டார். இனியும் சாதிப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்வேன். அவர் மாதிரியான ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து எளிதில் தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.