ஆட்ட நாயகன் விருது
அதிகபட்சமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார். அதிரடியாக விளையாடிய கே எல் ராகுல் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
தோனியின் நேர்மை
போட்டியின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் உண்டு. அந்த சம்பவம் தான் தோனியின் நேர்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அந்த போட்டியில், ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடினார்.
|
அம்பயரிடம் அப்பீல்
அந்த பந்தினை எல்பிடபிள்யூ என்று நினைத்து அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், தோனியோ அந்த பந்து கிளவுஸ்சில் பட்டது என்று தெளிவாக சொன்னார். மேலும், நான் ரிவீயு கேட்கவில்லை கிளவுஸ்சில் பட்டது என்று சொல்கிறேன் ஹிந்தியில் கூறினார்.
அனைவரும் பிரமிப்பு
தோனி இதுபோன்று சரியான முடிவினை எடுப்பது முதன்முறை இல்லை. ஸ்டம்பிற்கு முன்னால் இருக்கும் அம்பயர் மற்றும் பவுலருக்கு தெரியாத அந்த பந்தினை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து தோனி சரியாக கணித்தது அனைவரையும் பிரமிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.