ஜார்க்கண்ட் தேர்தல்
ஏன் எனில், ஜார்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது. அங்கு பாஜக தலைமையில் ஆட்சியில், முதல்வராக ரகுபர் தாஸ் உள்ளார். வரும் சட்ட சபை தேர்தலில், தோனியை பாஜக சார்பில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது.
தீவிர பேச்சுவார்த்தை
இந்நிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தோனியை பாஜகவில் இணைப்பதற்கான தீவிர பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு அறிவித்தபின் அவர் பாஜகவில் சேரவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்று முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பாஸ்வான் கூறி உள்ளார்.
நிச்சய வாய்ப்பு
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தோனியிடம் நீண்டகாலமாக பேச்சு நடத்தி வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபின் நிச்சயம் பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
முயற்சிகள் நடக்கின்றன
தோனி எனது நெருங்கிய நண்பர். உலக அளவில் அவர் பெயர் பெற்றவர். அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்றார்.
கவுதம் கம்பீர்
ஏற்கெனவே லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, கவுதம் கம்பீர், பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கம்பீருக்கு டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக இருக்கிறார்.