என்ன சொன்னார்
தற்போது யோக்ராஜ் சிங் உலகக் கோப்பை செமி பைனல் போட்டி குறித்தும் பேசி இருக்கிறார். அதில், தோனி வேண்டும் என்றேதான் செமி பைனல் போட்டியில் மோசமாக விளையாடினார் . அவர் நினைத்து இருந்தால் அந்த போட்டியில் வென்று இருக்க முடியும்.
ஏன் வேண்டும்
ஆனால் தோனி வேண்டும் என்றே ரன் அவுட் ஆனார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடும் போது தோனி இப்படி ஆட மாட்டார். அப்போது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தோனி ஆடுவார். இந்திய அணிக்காக அன்று அவர் அப்படி ஆடவில்லை.
ஜடேஜா மட்டுமே
ஜடேஜா மட்டும்தான் அன்று நடந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். ஆனால் தோனி வேண்டும் என்று மெதுவாக ஆடினார். இந்தியாவை தோல்வி அடைய செய்ய வேண்டும். இந்தியா பைனலுக்கு செல்ல கூடாது என்று கருத்தாக அவர் ஆடினார்.
என்ன காரணம்
இதற்கு காரணம் இருக்கிறது. தோனி தான்தான் உலகக் கோப்பையை வென்ற ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கோலி உலகக் கோப்பையை வென்றுவிட கூடாது என்று உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தோனி திட்டமிட்டு அப்படி விளையாடினார், என்று பரபரப்பு குற்றச்சாட்டை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.