30 யார்டில் 6 பேர்
ஆனால் தற்போது தோனி ரன் அவுட் ஆன விதம் சர்ச்சையாக மாறி இருக்கிறது. பெர்குசன் பந்து வீசும் முன்பாக 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 6 வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். 3வது பவர் பிளே எனப்படும் 40/50 ஓவர்களுக்குள், 5 பீல்டர்கள் மட்டும்தான் நிறுத்த வேண்டும். இதை அம்பயர் கவனிக்கவில்லை என்று ரசிகர்கள் பொங்கி தள்ளி வருகின்றனர்.
ரன் அவுட் முடிவு
தோனியின் ரன் அவுட் மட்டும் நடக்காமலிருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். தோனியின் கிளவுசில் இருந்த முத்திரையை கவனித்து அதை ஊதி, பெரிதுபடுத்திய ஐசிசி, இதுபோன்ற முக்கிய விஷயங்களை கண்டுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
|
ரசிகர்கள் கேள்வி
ஆனந்த நரசிம்மன் என்பவர்,அம்பயர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? பவர் பிளேயில் அவர்கள் எப்படி 6 பேருடன் விளையாடலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
|
அசிங்கமாக இருக்கிறது
தோனியின் ரன் அவுட்டின் போது 6 பீல்டர்கள் இருந்திருக்கின்றனர். என்ன ஒரு அசிங்கம். உலக கோப்பை அரையிறுதியில் அம்பயர்களின் செயல்பாடுகள் அசிங்கமாக இருக்கிறது என்று மற்றொரு ரசிகர் கூறியிருக்கிறார்.
|
உண்மையா என கேள்வி
கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் ராமனும் இதே கேள்விளை கேட்டிருக்கிறார். உண்மையிலேயே 6 பீல்டர்கள் நிற்பதை அம்பயர்கள் கவனிக்க தவறிவிட்டனரா? இது உண்மையா என்று கேட்டிருக்கிறார்.
|
ரசிகரின் வீடியோ
ஹரிஸ் என்பவர் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். மஞ்சள் சட்டையுடன் காணப்படும் ஒருவர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசுவது போன்று அதில் காட்டப்பட்டு இருக்கும். அந்த வீடியோவும் வைரலாகி இருக்கிறது.
|
ஒரு இன்ச் வித்தியாசம்
ரிஹானா என்பவர், தோனியின் ரன் அவுட் படத்தை பதிவிட்டிருக்கிறார். அதன் கீழ், அரையிறுதிக்கும், இறுதி போட்டிக்கும் ஒரு இன்ச் வித்தியாசம் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தோனி அவுட் தான்
அது உண்மையாக இருந்து அம்பயர் அதை கவனித்து நோ-பால் வழங்கி இருந்தாலும், ப்ரீ ஹிட்டிலும் ரன் அவுட் உள்ளது. எனவே தோனி அவுட்டாகி இருப்பார் என்றும் ட்விட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் அது கிராபிக்ஸ் தவறு என்றும் ரசிகர்கள்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.