For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் கிளவுசில் இருப்பத கண்டுபிடிச்சீங்க.. 6 பீல்டர்களை பாக்க மாட்டீங்களா? பொங்கிய ரசிகர்கள்

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : DHONI RUN OUT | தோனி ரன் அவுட்டே இல்லை! கதறும் ரசிகர்கள்! உண்மை என்ன?

மான்செஸ்டர்: அரையிறுதி போட்டியில் தோனியின் ரன் அவுட்டுக்கு அம்பயரின் கவனக்குறைவு தான் காரணம் என்று ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பொங்கி தள்ளுகின்றனர்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியானது நேற்று முன்தினம் மான்செஸ்டரில் நடைபெற்றது. போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால் ஒத்திவைக்கப்பட்ட போட்டி மீண்டும் நேற்று நடைபெற்றது. முடிவில், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நியூசிலாந்து முன்னேறியது.

இதனிடையே போட்டியின் 48வது ஓவரை நியூசிலாந்து வீரர் பெர்குசன் வீசினார். அந்த பந்தில் ரன் முயன்ற போது தோனி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இது இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

30 யார்டில் 6 பேர்

30 யார்டில் 6 பேர்

ஆனால் தற்போது தோனி ரன் அவுட் ஆன விதம் சர்ச்சையாக மாறி இருக்கிறது. பெர்குசன் பந்து வீசும் முன்பாக 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 6 வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். 3வது பவர் பிளே எனப்படும் 40/50 ஓவர்களுக்குள், 5 பீல்டர்கள் மட்டும்தான் நிறுத்த வேண்டும். இதை அம்பயர் கவனிக்கவில்லை என்று ரசிகர்கள் பொங்கி தள்ளி வருகின்றனர்.

ரன் அவுட் முடிவு

ரன் அவுட் முடிவு

தோனியின் ரன் அவுட் மட்டும் நடக்காமலிருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். தோனியின் கிளவுசில் இருந்த முத்திரையை கவனித்து அதை ஊதி, பெரிதுபடுத்திய ஐசிசி, இதுபோன்ற முக்கிய விஷயங்களை கண்டுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி

ஆனந்த நரசிம்மன் என்பவர்,அம்பயர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? பவர் பிளேயில் அவர்கள் எப்படி 6 பேருடன் விளையாடலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அசிங்கமாக இருக்கிறது

தோனியின் ரன் அவுட்டின் போது 6 பீல்டர்கள் இருந்திருக்கின்றனர். என்ன ஒரு அசிங்கம். உலக கோப்பை அரையிறுதியில் அம்பயர்களின் செயல்பாடுகள் அசிங்கமாக இருக்கிறது என்று மற்றொரு ரசிகர் கூறியிருக்கிறார்.

உண்மையா என கேள்வி

கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் ராமனும் இதே கேள்விளை கேட்டிருக்கிறார். உண்மையிலேயே 6 பீல்டர்கள் நிற்பதை அம்பயர்கள் கவனிக்க தவறிவிட்டனரா? இது உண்மையா என்று கேட்டிருக்கிறார்.

ரசிகரின் வீடியோ

ஹரிஸ் என்பவர் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். மஞ்சள் சட்டையுடன் காணப்படும் ஒருவர் என்ன செய்வது என்று தெரியாமல் பேசுவது போன்று அதில் காட்டப்பட்டு இருக்கும். அந்த வீடியோவும் வைரலாகி இருக்கிறது.

ஒரு இன்ச் வித்தியாசம்

ரிஹானா என்பவர், தோனியின் ரன் அவுட் படத்தை பதிவிட்டிருக்கிறார். அதன் கீழ், அரையிறுதிக்கும், இறுதி போட்டிக்கும் ஒரு இன்ச் வித்தியாசம் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தோனி அவுட் தான்

தோனி அவுட் தான்

அது உண்மையாக இருந்து அம்பயர் அதை கவனித்து நோ-பால் வழங்கி இருந்தாலும், ப்ரீ ஹிட்டிலும் ரன் அவுட் உள்ளது. எனவே தோனி அவுட்டாகி இருப்பார் என்றும் ட்விட்டரில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் அது கிராபிக்ஸ் தவறு என்றும் ரசிகர்கள்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Story first published: Thursday, July 11, 2019, 14:19 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
Dhoni run out against newzealand in semi final is umpiring error, fans troll.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X