For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் 200வது போட்டி... பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய 'தல'

துபாய் : ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வீரர் என்ற பெருமை நேற்றைய தினம் அந்த அணியின் கேப்டன் தோனிக்கு கிடைத்துள்ளது.

ஆனால் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதா வேண்டாமா என்ற சந்தேகத்தை தொடர்ந்து அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியில் அளித்தார்.

பேட்டிங்கில் இந்த சீசனில் எப்போதும் போல சொதப்பினார். ஆனால், பல்வேறு அதிரடிகளை கொண்டுவருவார் என்று கூறப்பட்ட நிலையில் கேப்டன்ஷிப்பிலும் தொடர்ந்து சொதப்பல் முடிவுகளை எடுத்து வருகிறார். நேற்றைய தினமும் அது எதிரொலித்தது.

யார் அந்த முடிவை எடுத்தது? கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்!யார் அந்த முடிவை எடுத்தது? கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்!

கனவான பிளே ஆப் சுற்று

கனவான பிளே ஆப் சுற்று

ஐபிஎல்லில் தொடர்ந்து 13வது வருடமாக விளையாடிவரும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தன்னுடைய அணியை இதுவரை பிளே ஆப் சுற்றிற்கு அழைத்து செல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு அது வெறும் கனவாகவே மாறிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினால் என்ன.. தொடர்ந்து ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவார், அணியை வெற்றி பெற செய்வார் என்று ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருந்தனர். ஆனால் எல்லாருடைய கனவிலும் மண்ணை வாரி போடும் செயலாகவே இருந்தது சிஎஸ்கேவின் ஆட்டம்.

தோனியின் 200வது போட்டி

தோனியின் 200வது போட்டி

ஐபிஎல்லின் முதல் போட்டியில் ரசிகர்களுக்கு சிறப்பான துவக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்த சிஎஸ்கே தொடர்ந்து சொதப்பல்களை பரிசாக அளித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தனது 200வது போட்டியை நேற்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்மூலம் பூர்த்தி செய்துள்ளார் தோனி.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இதில் சிஎஸ்கே வெற்றி பெறும்... மீண்டும் மேலெழுந்து வரும், பிளே ஆப்பிற்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்தான் டிவி பெட்டியின் முன்பு அமர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு இந்த சீசனில் தொடர்ந்து அளித்துவரும் ஏமாற்றத்தையே இந்த போட்டியிலும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தோனி.

வெட்டி நியாயம்

வெட்டி நியாயம்

அவர் சரியாக விளையாடாததை கூட ஏற்றுக் கொள்ள முடிந்த ரசிகர்களால், அவரது மோசமான கேப்டன்ஷிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று அவர் வெட்டி நியாயம் பேசியதையும் ஏற்க முடியாமல் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தோனி ரசிகர்கள் திணறி வருகின்றனர்.

Story first published: Tuesday, October 20, 2020, 11:21 [IST]
Other articles published on Oct 20, 2020
English summary
In his historic 200th IPL game Dhoni dished out probably his worst performance
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X