இதுதான் ஒரே ஆசை
அருண் பாண்டே கூறியது இது தான். "ஒருநாள் போட்டிகளில் தன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது இருந்து தோனியின் ஒரே கனவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது தான். அதில் அணியின் ஆலோசகராகவும் இருப்பார் தோனி" என கூறி உள்ளார்.
விட்டுக் கொடுத்தார் தோனி
மேலும், "அவர் கோலிக்கு நேரம் கொடுத்து கேப்டன் பதவியில் வளர இடம் அளித்தார். அவரது எண்ணத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை" என கூறினார் பாண்டே. தோனி தான் கேப்டன் பதவியை கோலிக்கு விட்டுக் கொடுத்தார் என்பது போல கூறியுள்ளார் அருண் பாண்டே.
டி20 அணியில் இருந்து நீக்கம்
தோனி சில காலமாக ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பதில்லை. எனினும், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார். 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி அணியில் நீடிக்க மாட்டார் என்பதை அடுத்து அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தோனிக்கு அழுத்தம்
இந்த சூழ்நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வளர்ந்து வருகிறார். டெஸ்ட் அணியில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் இடத்தை ஓரளவு தக்க வைத்து விட்டார். அடுத்து டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். இது தோனிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், தோனி 2019 உலகக்கோப்பை வரை ஆடுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறுகிறார்கள்.