நோபால் சர்ச்சை
அதனை ஸ்ட்ரைட் அம்பயர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட் நோபால் என்று அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் உல்ஹாஸ் காந்தே அதனை ரத்து செய்தார். இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
தோனி வாக்குவாதம்
நோ பால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து நோபால் ரத்து குறித்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக தோனிக்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தோனியின் பயணம்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இது குறித்து கூறியதாவது: இந்திய அணிக்கான தோனியின் பயணம் அபரிதமானது. அதை யாரும் மறுக்க முடியவில்லை.
இவ்வளவு கோபம்
அந்த சாதனைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவரின் கோபத்தை நான் பார்த்தது கூட இல்லை. சென்னை அணிக்கு கேப்டனாக வந்தபின் சிறிது உணர்ச்சிவசப்பட்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி நடந்து கொண்டார்.
தோனி ஏன் வந்தார்?
அந்த போட்டியில் ஏன் அவர் மைதானதுக்குள் வந்தார்? தோனி வந்தே இருக்கக் கூடாது. ஆட்டத்தில் கடைசிநேரத்தில் தோனி மைதானத்துக்குள் வந்திருக்கக் கூடாது. எனவே அவருக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும்.
3 போட்டிகள்
தோனி போன்றே வருங்காலத்தில் வேறு யாரேனும் செய்தால் என்னாகும்? எல்லா கேப்டனும் இப்படி நடந்து கொண்டால், நடுவருக்கு என்ன மரியாதை? எனவே, தோனிக்கு தடை விதிக்க வேண்டும், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அவரை விளையாட விடக்கூடாது. அவருக்கு அளிக்கும் தண்டனை மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று சேவாக் கூறினார்.