தோனியின் பங்களிப்பு
கோப்பை இந்தியாவுக்கு தான் பலரும் ஆதரவு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதிலும் தோனியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். கோலி தலைமையிலான படையும் உலக கோப்பைக்கு தயாராகி விட்டது.
தோனி தான் துருப்புச்சீட்டு
இந் நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு தோனி தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில் தோனி என்ற ஜீனியஸ் இருக்கிறார்.
இந்திய அணியின் மூளை
இந்திய அணியின் மூளை அவர். ஏற்கெனவே 2 உலக கோப்பைகளில் வென்ற அணியை வழிநடத்தியவர் என்பதால் இந்த ஆட்டத்தை பற்றி நன்றாக அறிந்தவர். அவருடைய அனுபவம் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் நிச்சயம் உதவும். தோனியே உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார்.
சிறப்பான பேட்டிங் வரிசை
அதே சமயத்தில் கோலி தலைமையிலான அணிக்கு இது முதல் உலக கோப்பை தொடர். எனவே, அவரும் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க நிச்சயம் முயற்சிப்பார். சிறப்பான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியாவிற்கு இங்கிலாந்தின் ஆடுகளமும் சாதகமாகவே அமையும். உலக கோப்பை தொடரில் 450 ரன்கள் வரை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறினார்.