என்ன பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டியில், தோனி இன்னும் ஓய்வு பெறாதது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் இந்த உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை. அவரின் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே உங்களுக்கு தெரியும். தோனியின் ஆட்டத்தில் பழைய வேகம் எதுவும் இல்லை.
அணிக்கு
அவர் அணியில் இருப்பது அணிக்குத்தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அவரை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதேபோல் அவரும் அணிக்குள் பிரச்சனை செய்ய கூடாது. அவர் முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் இப்போதே சரியான முடிவை அறிவிக்க வேண்டும்.
ஏன் முக்கியம்
தோனி பல விஷயங்களை கிரிக்கெட் உலகில் நிரூபித்துவிட்டார். தோனி இனியும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் செய்ய வேண்டியதை செய்துவிட்டார். அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியது கிடையாது. அவர் இப்போதே ஓய்வை அறிவிப்பது நல்லது.
இல்லை
அவரை எப்படியும் இனி அணியில் எடுக்க மாட்டார்கள். ஆம் அவரை அணியில் தேர்வு செய்வது இனி கடினம். அதனால் அவரே தனக்கான கடைசி தொடரை அறிவிப்பது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன், என்று கூறியுள்ளார் அந்த பிசிசிஐ நிர்வாகி.