விராட் கோலி
விராட் கோலி கடந்த 2008இல் இந்திய அணியில் அடி எடுத்து வைத்து பின் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் பல இளம் பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இடத்தை அடைய வேண்டும் என்பதே கனவாக உள்ளது.
பாபர் ஆசாம்
தற்போது உள்ள பேட்ஸ்மேன்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், விராட் கோலிக்கு இணையாக ஆடுவதாக கூறப்படுகிறது. இதை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, மற்ற நாட்டு முன்னாள் வீரர்களும் கூறி உள்ளனர்.
பவுண்டரி
இருவருக்கும் இடையே ஆன முக்கிய ஒற்றுமை, அவர்கள் ஷாட் ஆடுவது தான். இது பற்றி ஆமிர் சோஹைல் கூறுகையில், "இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை, இருவரும் 40 சதவீத ரன்களை பவுண்டரி மூலம் எடுக்கின்றனர்." என்றார்.
டிரைவ் ஆடும் விதம்
மேலும், "இருவரும் நல்ல டிரைவ் ஆடுகின்றனர். பிரன்ட் ஃபூட்டில் புல் ஷாட் அடிக்கின்றனர். இருவரும் ஆஃப்-சைடில் பந்தை லேசாக பிரன்ட் ஃபூட்டில் புஷ் செய்கின்றனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை தேர்ட் மேன் திசைக்கு தங்கள் ரிஸ்ட் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இவற்றில் இருவரும் வெற்றிகரமாக உள்ளனர்" என்றார்.
வித்தியாசம் இதுதான்
"விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருக்கிறார். ஆனால், பாபர் ஆசாம் அமைதியாக காணப்படுகிறார். ஒருவேளை பந்துவீச்சாளர்கள் மனதில் பயத்தை உண்டாக்க கோலி வெளியே ஆக்ரோஷத்தை காட்டி, உள்ளே அமைதியாக இருக்கக் கூடும்." என்றார்.
ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும்
"பாபர் ஆசாம் களத்தில் தன் உணர்வுகளை கொண்டு வர வேண்டும். அவர் தன் பேட்டிங் மூலம் பந்துவீச்சாளர்களை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார். அவர் ஆக்ரோஷமாகவும் இருந்தால் நீண்ட நாள் பார்வையில் அது அவருக்கு உதவும்" என்றார் ஆமிர் சோஹைல்.