டி20 கிரிக்கெட் தொடர்
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 -1 என முன்னிலை வகித்து வருகிறது. இன்று தொடங்கிய கடைசி போட்டி தான் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை இறுதி செய்யும். இந்த போட்டி முடிந்த பிறகு ஜூலை 7ம் தேதியன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது.
இந்திய அணி
இந்த தொடரின் முதல் டி20 போட்டிக்கு அயர்லாந்து தொடரில் விளையாடிய அதே இந்திய அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளுக்கு இந்தியாவின் முன்னணி வீரர்கள் அணிக்குள் இணைந்துவிடுவார்கள். வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
புதிய கேப்டன்
இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்துடனான டி20 கிரிக்கெட் தொடருக்கு கிடையாது. டி20 தொடருக்காக இந்திய அணியை தயார் படுத்த, இந்தியா மற்றும் கவுண்டி அணிக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட பயிற்சி தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் டி20 பயிற்சி போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது. அயர்லாந்து தொடரில் விளையாடிய வீரர்கள் இங்கிலாந்து வந்தடைந்துவிட்டனர். இந்த அணியை வழிநடத்தும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார். 2வது பயிற்சி போட்டிக்கும் இவரே தான் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.
உள்நோக்கம் என்ன
நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக்கை, டி20 உலகக்கோப்பையில் விளையாட அவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவரை விக்கெட் கீப்பராக செயல்படவைக்கவும் திட்டம் போடப்பட்டு வருகின்றன. தினேஷ் கார்த்திக் போன்று அனுபவ வீரர்கள் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்தால் ஃபீல்ட் செட்டிங்கிற்கு உதவியாக இருக்கும். எனவே அவரின் வியூகங்களை பார்ப்பதற்காக பிசிசிஐ கேப்டனாக நியமித்துள்ளது.