புதிய குழப்பம்
தினேஷ் கார்த்திக்கை பினிஷர் ரோலுக்காக தான் தேர்வுக்குழுவினர் இந்திய அணியில் தேர்வு செய்தனர். ஆனால் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஏற்கனவே அணியில் உள்ளனர். இந்த நிலையில், மிடில் ஆர்டரில் 3வது வீரராக இஷான் கிஷனையும், 4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரையும், 5வது வீரராக தீபக் ஹூடாவையும் சேர்க்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
பயிற்சியில் இல்லை
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பயிற்சி முகாமில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். மேலும் ஹர்திக் பாண்டியா மீது ராகுல் டிராவிட் தனி கவனம் செலுத்தி ஏதோ அறிவுரைகளை கூறி இருந்தார். எப்போதும் பயிற்சி முகாமில் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்களுக்கு தான் அதிக நேரம் பேட்டிங் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள்,
இளம் வீரருக்கு வாய்ப்பு
பிளேயிங் லெவனில் இல்லாதவர்களுக்கு கடைசியாக தான் வாய்ப்பு வழங்கப்படும். இதனால் தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. மேலும் தீபக் ஹூடா சுழற்பந்தும் நன்றாக வீசுவார். மேலும் லக்னோ அணிக்காக ராகுல் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எப்போது வாய்ப்பு?
இதனால் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பதை விட தீபக் ஹூடாவை தான் அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஐபிஎல் தொடர் போது ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் தற்போது ராகுல் விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக்கிற்கு கதவு திறந்துவிட்டதாக கருதப்படுகிறது.