ஸோம்பி மாதிரி இருக்கோம்
இதைத்தான் தற்போது தினேஷ் கார்த்திக்கும் பளிச்சென கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உடம்பெல்லாம் அப்படியே ஸோம்பி மாதிரி இருக்கிறது. குறைந்தது 4 வார காலமாவது பயிற்சி எடுத்தால்தான் விளையாடுவதற்கு தகுதி கிடைக்கும். எல்லோருக்குமே இதே நிலைதான். பயிற்சி எடுக்க ஆரம்பித்ததுமே விளையாட முடியாது. படிப்படியாகத்தான் போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரொம்பக் கஷ்டம்
மீண்டும் விளையாட்டுக்குத் திரும்புவது என்பது கஷ்டமான வேலையாக இருக்கும். நிறைய பயிற்சிகள் தேவைப்படும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனைவருமே ஃபிட்டாக வேண்டியிருக்கும். முதலில் நமது உடலை பயிற்றுவிக்க வேண்டும். பிறகு அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதன் பிறகுதான் விளையாட்டுக்குள் இறங்கவே முடியும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை நிலவரம்
சென்னையில் தற்போது நிறைய தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளனர். எனவே அனுமதி பெற்று பயிற்சியில் ஈடுபடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். படிப்படியாக இதை செய்ய வேண்டும். முழுமையாக உடம்பு முடங்கிப் போய்க் கிடக்கிறது. வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருப்பதால் இப்படி ஆகி விடும். அதை சரி செய்ய வேண்டும் என்றார் தினேஷ் கார்த்திக்.
சும்மா இருந்தால் இப்படித்தான்
கிட்டத்தட்ட 2 மாதமாக கிரிக்கெட் வீரர்கள் முடங்கிப் போயுள்ளனர். ஐபிஎல் தொடர் நடந்து முடிந்திருக்க வேண்டியது. அதுவும் இல்லாமல் போய் விட்டது. அடுத்தடுத்த தொடர்களுக்குள் இந்திய வீரர்கள் மூழ்கிப் போயிருப்பார்கள். அதுவும் நடக்காமல் போய் விட்டது. நாடே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. கொரோனாவும் இப்போதுதான் தீவிரமடைந்து வருவதால் யாருக்குமே எதிலுமே தெளிவு இல்லாத நிலையே காணப்படுகிறது.