தீவிர பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள்
யூஏஇயின் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற இடங்களில் வரும் 19ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணி வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 19ம் தேதி முதல் போட்டியில் மோதவுள்ளன.
சிஎஸ்கே சிஇஓ திட்டவட்டம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குவாரன்டைனில் வைக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் கடந்த சில தினங்களாக பயிற்சி போட்டிகளில் மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு வீரர் டேவிட் மலன் அணியில் இணைய வாய்ப்பில்லை என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
உற்சாகமாக பயிற்சி
இந்நிலையில் 39 வயதில், வயதான காலத்தில் தானும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியும் தங்களுக்கு பிடித்ததை செய்ததாக அணியின் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவரும் தோனியும் உற்சாகமாக பயிற்சிப்போட்டிகளில் விளையாடுகின்றனர்.
ருதுராஜ் தவிர்த்தவர்களுக்கு கொரோனா நெகட்டிவ்
அவர்கள் ஆட்டத்தில் சிறிதும் தொய்வு காணப்படவில்லை. இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் சிறப்பான டி20 கிரிக்கெட் அனுபவத்தை இந்த சீசனில் இவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கடந்த மாதத்தில் கொரோனாவால் சிஎஸ்கே வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் ருதுராஜ் கெய்க்வாட் தவிர்த்த மற்றவர்கள் கொரோனா நெகட்டிவ் அறிவிக்கப்பட்டு தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.