பலரும் கருத்து
சில கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லி அணியில் ஆடிவரும் நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியதாவது:
வழக்கமானது தான்
இத்தகைய சுவாரசிய விஷயங்கள் கிரிக்கெட்டில் நடப்பது வழக்கமானது தான். ஐபிஎல்லில் இதுபோன்று ஆச்சரியத்திற்குரிய சம்பவங்கள் நடக்கின்றன. கிரிக்கெட்டை சரியான முறையில் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
விதிகள் இருக்கின்றன
அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியது தேவையில்லாத ஒன்று. அவர் பட்லரை அவுட்டாக்கிய முறை விதிகளின்கீழ் இருக்கிறது. ஆனால்.. சரியான ஆட்டத்திற்குரிய முறையல்ல என்று அவர் தெரிவித்தார்.
அஸ்வின் விளக்கம்
மன்கட் முறையை பயன்படுத்தியதற்காக அஸ்வின் மீது இன்றளவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால்... இது எதிர்பாராத ஒன்று என்று அவரும் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.