அதிரடி பென் ஸ்டோக்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது நியூசிலாந்தில் அவருடன் உள்ளார். இதையடுத்து அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்
இந்நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் ஸ்டோக்ஸ் பங்கேற்கும் வாய்ப்புகள் குறைவு என்று இங்கிலாந்து ஸ்பின்னர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். ஆயினும் கிரிக்கெட்டின் சூப்பர் மேனாக விளங்கும் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தால் இந்த தொடரின் சிறப்பான நிகழ்வுகளுக்கு காரணமாக விளங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெறுமையை ஏற்படுத்தியுள்ளது
ஸ்டோக்ஸ் இல்லாத நிலையிலும் இந்த சீசனின் 8 அணிகளில் மிகவும் டேஞ்சரான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளதாகவும் மான்டி கூறியுள்ளார். ஆனால் ஸ்டோக்ஸ் இல்லாதது அணியில் மிகப்பெரிய வெறுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பின்னர்கள் ஆதிக்கம்
ஐபிஎல் போட்டிகளில் எப்போதுமே ஸ்பின்னர்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ள மான்டி, இந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பேலன்சாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.