எத்தனை ரன்கள்
இந்திய அணி இன்று காலையிலேயே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றியை நோக்கி ஆடியது.ஓப்பனிங் வீரர் சுப்மான் கில் எடுத்த 91 ரன்கள், புஜாரா உடலில் காயத்தோடு எடுத்த அரைசதம், பண்ட் உறுதியாக நின்று அரைசதம் எடுத்த பின்பும் அதிரடி காட்டியது இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியது.
புஜாரா
அதிலும் விரலில் காயத்தோடு புஜாரா ஆடிய விதம் பெரிய அளவில் வைரலானது. இந்திய அணி 39 ரன்கள் எடுத்திருந்த போதே புஜாரா அவுட்டாக வேண்டியது. அப்போது நாதன் லைன் பந்தில் புஜாரா எல்பிடபில்யூ ஆகியிருக்க வேண்டியது. ஆனால் டிஆர்எஸ்சில் அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டதால் புஜாராவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.
அருகில் சென்றது
பந்து ஸ்டம்பை தொட்டது. பந்தின் முக்கால்வாசி பகுதி ஸ்டம்பில் மோதியது. ஆனாலும் கூட அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டதால் புஜாராவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையானது. ஆனால் அதன்பின் புஜாரா 56 ரன்கள் இருந்த போது அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.
நடுவர்
பந்து ஸ்டம்பை லேசாக உரசி சென்றது. இதற்கு புஜாரா டிஆர்எஸ் கேட்டார். ஆனால் பந்து முழுமையாக ஸ்டம்பை மோதவில்லை என்றாலும் தேவையின்றி அவருக்கு அம்பயர்ஸ் கால் கொடுக்கப்பட்டு விக்கெட் கொடுக்கப்பட்டது. இந்த முடிவும் தவறானது ஆகும் . இப்படி இரண்டு முறை ஒரே நாளில் டிஆர்எஸ்ஸில் அம்பயர்ஸ் கால் காரணமாக முடிவு மாறியது.
முடிவு
அம்பயர்ஸ் கால் காரணமாக இன்று மொத்தமாக ஆட்டத்தின் போக்கே மாறியது. புஜாராவிற்கு மட்டும் அம்பயர்ஸ் கால் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று ஆட்டம் வேறு மாதிரி சென்று இருக்கும். இதனால் டிஆர்சில் அம்பயர்ஸ் கால் அம்சம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.