வாய்ப்பு
இந்த தொடரில் சிஎஸ்கே அணி அதிகம் நம்பி இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் டு பிளசிஸ். சென்னை அணியில் இவர் ஒன் டவுன் வீரராக களமிறங்கி வருகிறார். இந்த நிலையில் வரும் சீசனில் இவர்தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கருதப்படுகிறது.
சிஎஸ்கே
சிஎஸ்கே அணி இவரை அதிகம் நம்பி உள்ளது. இந்த நிலையில் தற்போது டு பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2012ல் இவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். தற்போது இவருக்கு 36 வயதாகிறது.
டெஸ்ட் போட்டி
இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் டு பிளசிஸ் ஆடி உள்ளார். இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டி 20 போட்டிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று இவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்த வருடம்
இந்த வருடமும், அடுத்த வருடமும் அடுத்தடுத்து டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது.இதில் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற டு பிளசிஸ் திட்டமிட்டுள்ளார். இதனால் இவர் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆட வேண்டும் என்று நினைக்கிறார்.
ஐபிஎல்
இதை எல்லாம் மனதில் வைத்து தற்போது டு பிளசிஸ் ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் இந்த வயதில் காயம் ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னதாக மொயின் அலி தற்போது நடக்கும் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் .
ஓய்வு
ஐபிஎல்லை மனதில் வைத்து இவர் தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல் ஐபிஎல்லுக்காக தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். தற்போது டு பிளசிஸ் டி 20 போட்டிகள் மீதும் ஐபிஎல் மீதும் கவனமும் செலுத்த உள்ளார்.