ஒருநாள் தொடர் அணி
ஒருநாள் அணியில் பல முக்கிய மாற்றங்கள் உள்ளன. கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், சாஹல் ஆகியோர் உள்ளனர். கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.
டி 20 அணி
டி.20 அணியில், கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, ரிஷப் பன்ட் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களுடன் கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்வு பெற்றிருக்கின்றனர்.
தோனி விளையாடவில்லை
அணி தேர்வுக்கு பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி இருப்பதாவது: மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் தோனி பங்கேற்கவில்லை. இருப்பினும் அடுத்து 2023ம் ஆண்டு உலக கோப்பை, எதிர்கால தொடர்கள் ஆகியவற்றை முன் வைத்து, சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எப்படி உள்ளது?
எனவே ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. களத்தில் அவர்களது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து கண்காணிக்க உள்ளோம்.
ரசித்த விமர்சனம்
அம்பத்தி ராயுடு, டி20 ஆட்டத்தின் அடிப்படையிலேயே ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில் வேறு பல திட்டங்களையும் நாங்கள் வைத்திருந்தோம். அவரது 3 டி விமர்சனத்தை நாங்கள் வெகுவாக ரசித்தோம்.
ஏற்புடையதல்ல
அவர் உடல்தகுதி சோதனையில் தோல்வியுற்றபோது கூட அதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தினோம். அணி தேர்வு தொடர்பான சில திட்டங்களின் அடிப்படையிலேயே அம்பத்தி ராயுடு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.