பயிற்சியாளர் அவதாரம்
இந்நிலையில் ஓய்வு அறிவிப்புடன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு இருந்த லக்ஷ்மிபதி பாலாஜி ஓராண்டிற்கு ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிராவோவின் பயிற்சியில் தோனி தலைமையில் சிஎஸ்கேவின் செயல்பாட்டை பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
நெகிழ்ச்சி பேச்சு
இதுகுறித்து பேசியுள்ள பிராவோ, இந்த புதிய பயணத்தை தொடங்க நான் ஆவலுடன் காத்துள்ளேன். பயிற்சியாளர் என்பதற்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஐபிஎல்-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்று ஆவேன் என நினைக்கவே இல்லை. ஆனால் அதை விட ஐபிஎல்-ல் விளையாடியது தான் எனக்கு மகிழ்ச்சி. பவுலர்களுடன் நான் நிறைய பணியாற்றியுள்ளேன் எனவே புதிய திட்டங்களுடன் மீண்டும் வருவேன் என பிராவோ கூறியுள்ளார்.
பிராவோவின் ரெக்கார்ட்
2011ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிராவோ, இதுவரை அந்த அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கில் 1,556 ரன்களை குவித்துள்ளார். ஒட்டுமொத்த ஐபிஎல் ரெக்கார்ட் என பார்த்தால் பிராவோ தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் எடுத்த வீரராகும்.161 போட்டிகளீல் 183 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
தோனியின் முடிவு
இதே போல தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான கெயீரன் பொல்லார்ட்-ம் தனது ஓய்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதுமட்டுமல்லாமல் அவர் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே தோனியும் இந்தாண்டுடன் ஓய்வை அறிவித்தால் சிஎஸ்கேவின் பயிற்சியாளராக வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.