மும்பை : மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் தீவிர மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் மழைக்கு நெருல்லில் உள்ள டிஒய் படேல் மைதானம் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து மும்பை கமிஷனர் சஞ்சய் குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
4 கோப்பைகளை வென்ற ஐபிஎல் கேப்டன்... மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனின் தியரி
மும்பையில் கடந்த சில தினங்களாக வாட்டிவரும் தொடர் மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெருல்லில் உள்ள டிஒய் படேல் மைதானமும் மழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சூறாவளியால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை கமிஷனர் சஞ்சய் குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். இந்த மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி, அன்டர் 17 ஃபிபா உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மைதானம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.