சொதப்பல்
முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் மிக மோசமாக இருந்தது. முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 100 ரன்களையாவது எட்டுமா என்ற சூழல் இருந்தது. பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 124/7ஆக உயர்த்தினார். இதனையடுத்து எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கேட்ச்
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த போது வாஷிங்டன் வீசிய 14ஆவது ஓவரின் கடைசி பந்தை டேவிட் மாலன் எதிர்கொண்டார். அவர் பந்தைத் ஸ்ட்ரைட் ஷாட்டாக தூக்கி அடிக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ ஹெல்மெட்டை தாக்கி கீழே விழுந்தது. பந்து அவரின் பேர்ஸ்டோ மீது பட்டதால், எளிய கேட்சை பிடிக்கமுடியாமல் வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றம் அடைந்தார்.
— Maqbool (im_maqbool) March 12, 2021 |
பதற்றம்
இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்பட்ட போது இப்படி நடந்ததால் ஆத்திரமடைந்த வாஷிங்டன் சுந்தர், பேர்ஸ்டோவிடம் எதோ கூறியுள்ளார். பின்னர் அது அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தை போராக மாறியது. ஒரு கட்டத்தில் அது முற்றிய போது நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் சுந்தர்
பொதுவாக பவர் ப்ளேவில் சிறப்பாக பந்துவீசக்கூடியவராக பார்க்கப்படும் இப்போட்டியில் 10 ஓவர்களுக்கு பின்னரே பந்துவீச வந்தார். மேலும் 2.3 ஓவர்கள் மட்டுமே வீசிய வாஷிங்டன் சுந்தர்18 ரன்களை விட்டுக்கொடுத்து ஜேசன் ராய் விக்கெட்டை வீழ்த்தினார்.