லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை டெஸ்ட் போட்டி நடைபெறும் நிலையில் வரும் 7 ஆம் தேதி முதல் டி20 போட்டி சௌதாம்டன் நகரில் நடைபெறுகிறது.
டெஸட் போட்டிக்கும், டி20 போட்டிக்கும் ஒருநாள் மட்டும் தான் இடைவெளி இருக்கிறது. இதனால் இந்திய அணி இதற்கு மட்டும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று டி20 போட்டிக்கான பயிற்சி ஆட்டமும் ஜூலை ஒன்றாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது இதிலும் அயல்நாட்டு தொடரில் பங்கேற்ற அது இந்திய அணி இந்த தொடரில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் ஆர்ஸ்தீப் சிங், ராகுல் திருப்பதி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவலில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களின் திறனை ஆய்வு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு விபூதி அடித்த அயர்லாந்து.. ஷாக் ஆகி நின்ற இந்திய வீரர்கள்.. உண்மையை ஒப்புகொண்ட ஹர்சல்