அதிக பவுண்டரி
இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட முக்கிய காரணம், ஒரு விசித்திரமான விதிமுறை தான். அந்த விதிப்படி, சூப்பர் ஓவரும் டை ஆகும் பட்சத்தில் போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ரசிகர்கள் எதிர்ப்பு
இங்கிலாந்து 24 பவுண்டரிகளும், நியூசிலாந்து 16 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. இதனால், அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. நியூசிலாந்து அணி தோல்வி அடையாத நிலையில் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி, நியூசிலாந்துடன் பகிர்ந்து கொள்வது தான் நியாயம் என ட்விட்டரில் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
|
48 போட்டி எதுக்கு?
உலகக்கோப்பை தொடரில் 48 போட்டி நடத்தி விட்டு வெற்றியாளரை பவுண்டரி கணக்கு வைத்து தேர்வு செய்வீர்களா? என பொங்கி உள்ளார்.
|
அர்த்தமே இல்லை
இந்த விதியில் அர்த்தமே இல்லை. நியூசிலாந்து அணிக்கு அநியாயம் செய்துள்ளது ஐசிசி.
|
அதிக விக்கெட்
இறுதிப் போட்டியை பவுண்டரியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். இதே அதிக விக்கெட் வைத்து தீர்மானித்தால், நியூசிலாந்து தான் உலக சாம்பியன். கோப்பையை பகிர்ந்து கொள்ளவும். இறுதிப் போட்டியை பவுண்டரியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள். இதே அதிக விக்கெட் வைத்து தீர்மானித்தால், நியூசிலாந்து தான் உலக சாம்பியன். கோப்பையை பகிர்ந்து கொள்ளவும்.
|
சிறுவர் விளையாட்டு
இரு அணிகளும் ஒரே அளவு பவுண்டரி அடித்து இருந்தால், இரு அணிகளும் "ராக் பேப்பர் சிசர்" எனப்படும் சிறுவர் விளையாட்டை விளையாடி வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என கலாய்த்துள்ளார்.
|
உயரம்
இரு அணிகளும் ஒரே அளவு பவுண்டரி அடித்து இருந்தால், அடுத்து வீரர்களின் உயரத்தை வைத்து வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்!! முட்டாள்தனமா இருக்கு இல்லையா?
|
பகிர்ந்து கொள்ளவும்
இந்தப் போட்டி டை என்பது இங்கிலாந்துக்கும் தெரியும். மார்கன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
|
குழந்தைப் புள்ள ரூல்ஸ்
குழந்தைப் புள்ள ரூல்ஸ்.. ஐசிசி மிக அவமானகரமான விஷயத்தை செய்துள்ளது.