மே. தீவுகளை வெற்றிகொண்ட இங்கிலாந்து
கொரோனா வைரஸ் காரணமாக 4 மாதங்கள் முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாகிஸ்தானுடன் தனது அடுத்த தொடரை துவங்கியுள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
கடந்த 15ம் தேதி துவங்கிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை காண்பித்த நிலையில், சுதாரித்துக் கொண்ட இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முறையே 84 மற்றும் 75 ரன்களை குவித்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தனர்.
நாளை 2வது போட்டி துவக்கம்
இதையடுத்து இந்த தொடரில் இங்கிலாந்து அணி 3க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை இரண்டாவது போட்டியில் சௌதாம்டனின் ஏஜியஸ் பௌலில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் முனைப்படன் உள்ள நிலையில், இங்கிலாந்தின் முக்கிய ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த இரு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
வெற்றி பெற இங்கிலாந்து முனைப்பு
சொந்த காரணங்களுக்காக ஸ்டோக்ஸ் அடுத்த இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் துவங்கவுள்ள இந்த போட்டியை சோனி டிவி நேரிடையாக ஒளிப்பரப்ப உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவதன்மூலம் கோப்பையை வெல்ல முடியும் என்பதால் இங்கிலாந்து அணியும் போட்டியை வெல்ல முனைப்புடன் உள்ளது.