For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி கேப்டன் மார்கனுக்கு தடை..! ஐசிசி அதிரடி

துபாய்:இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஆன ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உலக கோப்பை போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ் தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து தற்போதுஆடி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிவில்லை.

England captain eoin morgan banned for next odi, icc issues order

2வது போட்டியில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3வது போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து யாரும் எதிர் பாராத வகையில் வென்றது.

அதுவும் 45வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 3வது போட்டியில் பந்து வீச இங்கிலாந்து அதிக நேரம் எடுத்துக்கொண்டது.

England captain eoin morgan banned for next odi, icc issues order

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஓராண்டு முடியும் முன்பே மீண்டும் போட்டியில் பந்துவீச அதிக நேரத்தை இங்கிலாந்து அணி எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஹர்திக் பண்டியாவை வைத்து.. விஜய் ஷங்கரை செமையாக கலாய்த்த சேவாக்..! ஏங்க இப்படி? ஹர்திக் பண்டியாவை வைத்து.. விஜய் ஷங்கரை செமையாக கலாய்த்த சேவாக்..! ஏங்க இப்படி?

அதனால், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஆட ஐசிசி தடை விதித்துள்ளது. மேலும் மோர்கனுக்கு போட்டியின் ஊதியத்தில் 40 சதவிகிதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு 20 சதவிகிதமும் அபராதத்தையும் ஐசிசி விதித்திருக்கிறது. இந்த தடையால், பாகிஸ்தானுக்கு எதிரான 4வது போட்டியில் இயன் மோர்கன் விளையாட முடியாது.

Story first published: Wednesday, May 15, 2019, 18:52 [IST]
Other articles published on May 15, 2019
English summary
England cricket captain Eoin morgan banned for one ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X