3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடரின் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது
வரும் ஜூலை 8 -12 தேதிகளில் சௌதாம்ப்டனின் ரோஸ் பௌல் மைதானத்தில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தற்போது அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த இரண்டு போட்டிகள் மான்செஸ்டரின் ஓல்டு ட்ரபோர்ட் ஸ்டேடியத்தில் 16 -20 மற்றும் 24 -28 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வாரங்கள் தனித்திருத்தல்
இந்த தொடரை முன்னிட்டு அடுத்த மாதம் 9ம் தேதியே இங்கிலாந்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணி பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு ஓல்ட் ட்ரபோர்ட்டுக்கு செல்லும் அந்நாட்டு வீரர்கள், 3 வாரங்கள் சமூக தனித்திருத்தலை மேற்கொண்டு இடையில் பயிற்சியும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏஜியஸ் பௌல் மைதானத்தில் முதல் போட்டியில் அந்த அணி பங்கேற்கவுள்ளது.
டிக்கெட் கட்டணங்கள் திருப்பியளிப்பு
இந்த போட்டிகள் இம்மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்னதாக ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனையும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த போட்டிகள் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடைபெறவுள்ளதால், ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணங்களை திருப்பி கொடுக்க இசிபி முன்வந்துள்ளது.