2 தொடர்களில் வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. கடந்த 2018-19க்கு பிறகு மீண்டும் டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் 2 டெஸ்ட்கள்
இதையடுத்து இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடவுள்ளது. 4 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 டெஸ்ட் போட்டித் தொடர்
தற்போது இலங்கையுடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இங்கிலாந்து. இதில் நடைபெற்ற முடிந்துள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. வரும் 22ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இங்கிலாந்திலிருந்து ஒரு குழு வருகை
இதையடுத்து வரும் 27ம் தேதி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சென்னை வரவுள்ளது. இதனிடையே இந்த தொடரில் இடம்பெறாத துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சிறிய அளவிலான வீரர்கள் முன்னதாக வரும் 22ம் தேதி சென்னை வரவுள்ளனர்.
இறுதி முடிவு அறிவிக்கப்படும்
இவர்களுக்கு கடுமையான குவாரன்டைன் விதிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாட்கள் இவர்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த விதிமுறைகளை இங்கிலாந்து அணி வீரர்கள் கடுமையாக பின்பற்றுவார்கள் என்று இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டுள்ள.