ஒருநாள் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த இரு தொடர்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணி அறிவிப்பு
வரும் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்த 3 போட்டிகளும் பூனாவில் நடைபெறவுள்ளன. இதையொட்டி இரு அணிகளும் தற்போது பூனாவிற்கு தங்களது பயணத்தை துவக்கியுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணி, இந்த தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.
அணியில் இடம்பெறாத ஆர்ச்சர்
இந்த தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இந்த தொடரை மட்டுமின்றி ஐபிஎல்லின் முதல் பாதியையும் அவர் விளையாட மாட்டார் என்று இசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
14 வீரர்கள் அணி அறிவிப்பு
மாறாக இயான் மார்கன் தலைமையிலான இந்த அணியில் மொயீன் அலி, ஜானி பார்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், லியாம் லிவ்விங்ஸ்டோன், மட் பார்க்கின்சன், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் மற்றும் ரீஸ் டோப்ளே ஆகியோர் கொண்ட 14 வீரர்கள் இணைந்துள்ளனர்.