மூன்றாவது
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் பலரும் அகமதாபாத் பிட்ச் மீது புகார் வைத்து வருகிறார்கள். இந்த பிட்ச்தான் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் கூட இந்த பிட்ச் குறித்து மறைமுகமாக பேசி இருந்தார்.
பிட்ச்
இந்த நிலையில் திடீர் என்று அகமதாபாத் பிட்ச் மீது புகார் வைக்காமல் இங்கிலாந்து அணி பின்வாங்கி உள்ளது. பிட்ச் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. மாறாக நான்காவது போட்டிக்கான பிட்ச் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
இங்கிலாந்து அணி
இது தொடர்பாக இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நாங்கள் பிட்ச் மீது புகார் வைக்க விரும்பவில்லை. ஸ்பின் பிட்சில் நாங்கள் நன்றாக ஆடி இருக்க வேண்டும். இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.
பேட்டிங்
இதே பிட்சில்தான் இந்திய அணியும் பேட்டிங் செய்கிறது. இந்த பிட்சில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய நாங்கள் எங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.அடுத்த போட்டியில் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
விமர்சனம்
நடந்து முடிந்த போட்டி குறித்து விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் பிட்ச் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கும் என்று நம்புகிறோம். நான்காவது டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு பிட்ச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று இங்கிலாந்து அணி கூறியுள்ளது.