இங்கிலாந்து
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோசமாக ஆடி வருவதால் கேப்டன் ஜோ ரூட்டின் பதவி சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. ரூட் எடுத்த முடிவுகள், அவர் தேர்வு செய்யும் அணி எல்லாம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணி நிர்வாகம் இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை என்கிறார்கள்.
சிக்கல்
இங்கிலாந்து அணிக்குள் ரொட்டேஷன் பாலிசியை கொண்டு வந்தது இவர்தான். கொரோனா காரணமாக வீரர்களை மாற்றி மாற்றி இறங்க வைத்தது ரூட்தான். இந்தியாவிற்கு எதிராக வலிமை இல்லாத அணியை ரூட்தான் தேர்வு செய்தது.
வருத்தம்
பிரைஸ்டோ, சாம் கரன் போன்ற வீரர்களை தொடக்கத்திலேயே அணியில் எடுக்காமல் ரூட்தான் சொதப்பினார். மொயின் அலியையும் இவர் சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல் ரூட் தற்போது தேர்வு செய்த பிளேயிங் லெவனும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தவறான முடிவு
கடந்த போட்டியில் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இவர் இறங்கியது இங்கிலாந்து அணி நிர்வாகத்தை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.டாஸ் வென்றும் கூட போட்டியில் வெல்ல முடியவில்லை என்பதால் ரூட் மீது கோபத்தில் உள்ளனர். அதோடு இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் ரூட்டுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
விமர்சனம்
ரூட்டின் கேப்டன்சி சரியில்லை என்று கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். தற்போது டெஸ்ட் உலகக் கோப்பையில் இருந்தும் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்டது. இதனால் ரூட்டை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.