மைதானம்
அகமதாபாத்தில் உள்ள மோதேரா மைதானத்தில் ஆட்டம் நடக்க உள்ளது. 9 பிட்ச்கள் அடங்கிய இந்த மைதானம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இன்று திறக்கப்பட்ட மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
பிங்க் பால்
இரவு பகல் ஆட்டமான இந்த போட்டியில் பிங்க் பால் பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிங்க் பால் போட்டி என்பதால் டாஸ் வென்றது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.
மாற்றம்
இன்று ஆடும் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது ஆகும். இதனால் இந்திய அணியில் 3 ஸ்பின் பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வாஷிங்க்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆடும் அணி
இன்று ஆடும் இந்திய அணியில் கோலி, ரோஹித், கில், புஜாரா, ரஹானே, பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறார்கள்.