சிஎஸ்கே வெற்றி
தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்த சிஎஸ்கே அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்றைய ஐபிஎல்லின் 29வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் துபாயில் மோதியது. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இதில் பல அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் தோனி.
சிறப்பான துவக்கம்
வாட்சனுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் சாம் குர்ரானை துவக்க வீரராக டூ பிளசிசுடன் களமிறக்கியிருந்தார். அவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். 31 ரன்களை அடித்து அம்பத்தி ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார். இந்த போட்டியில் ஷேன் வாட்சன் அதிகபட்சமாக 42 ரன்களை குவித்தார்.
மகிழ்ச்சியுடன் விளையாடினேன்
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கியது சர்ப்பிரைசாக இருந்ததாக சாம் குர்ரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிராவோவுடன் ஐபிஎல்டி20.காமிற்காக வீடியோ மூலம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆயினும் அதை தான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக இருந்தது
துவக்க வீரராக களமிறங்கியது மிகவும் சிறப்பானது என்றும் முதலில் தடுமாறினாலும் பின்பு சமாளித்து ஆடியதாகவும் அவர் கூறியுள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க தான் முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எதிரணி கேப்டன் டேவிட் வார்னரின் முக்கிய விக்கெட்டையும் குர்ரான் வீழ்த்தியுள்ளார்.